திங்கள், 8 மே, 2017

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! May 08, 2017


கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க தடை விதித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திருவண்ணாமலை, சேலம், கரூர் மற்றும் அரியலூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நெடுஞ்சாலைகளில் இருந்து மாற்றப்பட்ட டாஸ்மாக் கடைகளை கிராமப் பகுதிகளில் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், எனவே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமெனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிக்கப்பட்டது. 

மனுவை விசாரித்த நீதிபதிகள், கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அந்த பகுதியில் மதுக் கடையை திறக்கக் கூடாதென, தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், டாஸ்மாக் கடைக்கு எதிராக அமைதியாக போராடும் மக்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தக் கூடாதென்றும் நீதிபதிகள் ஆணையிட்டு, வழக்கு விசாரணை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தனர். 

Related Posts:

  • வறுமையிலும் செம்மையாக வாழ வறுமையும், வசதிகளும் சோதனைதான் ஒருவருக்கு இறைவன் பொருள் வசதியைக் கொடுத்தால் அவரை அதன் மூலம் சோதித்துப் பார்க்கிறான். அதுபோல் ஒருவருக்கு வறுமையை அல்… Read More
  • Sleeping is Important Read More
  • கடன் வாங்க வேண்டாம் கடன் விஷயத்தில் கண்டிப்பு கடன் வாங்குவது, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றில் இஸ்லாம் கடுமையான நிலைபாட்டைக் கொண்டுள்ளது. 2295 – … Read More
  • பேராசை என்றால் என்ன? பேராசை என்றால் என்ன? ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதிகமான பணத்தை விரும்புவதுதான் பேராசை என்று பலரும் … Read More
  • யாசிக்கக் கூடாது யாசிக்கக் கூடாது 1472 – وحَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَي… Read More