வெள்ளி, 26 மே, 2017

ஏரி குளமாக மாறும் அபாயம் May 26, 2017

ஏரி குளமாக மாறும் அபாயம்


அடுத்த உலகப் போர் குடிநீருக்காகத் தான் நடைபெறும் என பல்வேறு தரப்பு வல்லுநர்கள் கூறி வருவது நாம் எல்லோரும் அறிந்த தகவல். இந்த வகையில் உத்தரகாண்டில் உள்ள நைனிடால் நகருக்கு குடிநீர் மூலமான நைனிடால் ஏரி முன் எப்போதும் இல்லாத வகையில் 18 அடி குறைந்துள்ளது சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மேலும் மொத்த நைனிடாலுக்கும் குடிநீர் கொடுக்கும் இந்த ஏரியிலுள்ள நீரின் அளவு குறைந்து வருவது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்திற்குப் புறம்பாக கட்டப்பட்ட கட்டிடங்கள், ஏரியைச் சுற்றி இருந்த மரங்கள் வெட்டுப்பட்டதும் போன்ற மனித நடவடிக்கைகளால் தான் நைனிடால் ஏரியின் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டது என வல்லுநர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். 

விரைவில் ஏரியைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் ஏரி குளமாக மாறிவிடும் எனவும் சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏரிக்குத் தண்ணீர் கொடுத்த கிட்டத்தட்ட 60 நீருற்றுகளில் 30 நீருற்றுகள் மட்டுமே தற்போது இருக்கின்றன. மேலும் நைனிடால் ஏரியைப் பாதுகாக்கும் வகையில் அதைச் சுற்றியுள்ள பகுதியைச் சூழல் உணர்வு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிபுணர்கள் முன் வைத்துள்ளனர்.