இலங்கையில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சோதனையான இத்தருணத்தில், இலங்கை சகோதார, சகோதரிகளுக்கு இந்தியா பக்கபலமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், உதவிப் பொருட்கள் அடங்கிய முதல் கப்பல் புறப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ள நரேந்திர மோடி, இன்று காலை அது கொழும்பு சென்றுவிடும் என கூறியுள்ளார். உதவிப் பொருட்கள் அடங்கிய இரண்டாவது கப்பல் நாளை கொழும்பு செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கான உதவிகள் தொடரும் என்றும் நரேந்திர மோடி கூறியுள்ளார். இலங்கையில் நேற்று பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.