சனி, 27 மே, 2017

மாடுகள் விற்பனை தடையை நீக்கக் கோரி சென்னையில் திடீர் சாலை மறியல்! May 27, 2017




இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளதால் கோடிக்கணக்கான குடும்பங்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்படும் என்று சேலம் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மிகப்பெரிய மாட்டு சந்தை உள்ளது. இந்த மாட்டு சந்தையில் வாரம்தோறும் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும். மாடுகள் விற்பனைக்கு மத்திய பல்வேறு புதிய நடைமுறைகளை விதித்துள்ளதால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த தடையால் மாடுகளை வாங்கவோ, விற்கவோ முடியாது என்றும் மாடு வளர்க்க முடியாத சூழலுக்கு விவசாயிகளை மத்திய அரசு தள்ளுவதாக குற்றம் சாட்டினர். மத்திய அரசு தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். 

இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னையில் எஸ்டிபிஐ கட்சியினர் நேற்றிரவு திடீரென சாலை மறியல் ஈடுபட்டனர். பட்டாளம் அருகே நடைபெற்ற சாலை மறியலால் அயனாவரம், வில்லிவாக்கம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டு வருவதாக நாமக்கல் அஞ்சுமன் பள்ளிவாசல் தலைவர் ஷேக் நவீத் தெரிவித்துள்ளார். தடையை திரும்பப் பெறாவிட்டால், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்தார்.