திங்கள், 4 டிசம்பர், 2017

ஓசூர் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த 60 யானைகள்! December 4, 2017

Image

ஓசூர் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த 60 யானைகள் கொண்ட காட்டு யானைக் கூட்டத்தை மிகுந்த போராட்டத்திற்கிடையே வனத்துறையினர் சானமாவு பகுதிக்கு விரட்டினர். 

கர்நாடக வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த 60 காட்டு யானைகள் கடந்த சில நாட்களாக ஒசூர் அருகே போடூர் பள்ளம் வனப்பகுதியில் முகாமிட்டிருந்தன. 

பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் இருக்கும் யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள ராமாபுரம், ஆழியாளம் போன்ற கிராமங்களில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து தக்காளி, ராகி போன்ற பயிர்களை சேதப்படுத்திவந்தன. 

இந்நிலையில் இன்று காலை போடூர் பள்ளம் வனப்பகுதியில் இருந்த 60 காட்டுயானைகளை வனத்துறையினர் சானமாவு வனப்பகுதிக்கு விரட்டினர். 
தற்போது யானைகள் சானமாவு வனப்பகுதியில் சம்பத் பாரை என்ற இடத்தில் உள்ளன.

சானமாவு வனப்பகுதியை சுற்றியுள்ள பீர்ஜேபள்ளி, ஆழியாளம், ராமாபுரம் போன்ற பகுதிகளில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும், ஆடு மாடு மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts:

  • News Read More
  • 969 -மியான்மரில் மியான்மரில் வளர்ந்து வரும் மத பிளவுகளை ஒரு அறிகுறியாகும், சில வணிக உரிமையாளர்கள் தங்களின் முஸ்லீம் போட்டியாளர்கள் இருந்து தங்களை வேறுபடுத்தி குறியீட… Read More
  • Former Islamophobe - Amoud Van Doorn ACCEPTS ISLAM முஹ்ம்மது நபியை அவமதித்து திரைப்படம் எடுத்தவர் இஸ்லாத்தை ஏற்றார் (அப்துல்லாஹ் றிசாத்) இறைத்தூதர் (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் திரைப்படம் இ… Read More
  • முபட்டி-Free English Medium முபட்டி  29/04/2013 -கல்வி  இயக்கம்  - இந்த கல்வி ஆண்டு  முதல் அணைத்து ஆரம்ப பள்ளிகளில் ஆன்கிலவலி கட்டாய கல்விகாண செயற்கை 30 /04… Read More
  • I Love Isha(alai) Good job, ICNA Los Angeles ! =] 47 people embrace Islam in Los Angeles today."I Love Jesus because I am Muslim" banner attracted many peo… Read More