வியாழன், 30 ஏப்ரல், 2020

இன்றைய இந்நிகழ்வுகள் 30 04 2020

...

லாக் டவுனில் சிக்கியவர்கள் சொந்த ஊருக்குச் செல்லலாம் - உள்துறை அமைச்சகம் அனுமதி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பிற நபர்கள் சில நிபந்தனைகளுடன் அந்தந்த இடங்களுக்குச் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, கடந்த மார்ச் 24 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் முக்கியமான நகரங்கள், தங்கள் பணியிடங்களிலிருந்து சொந்த ஊருக்குச் செல்ல முயன்றனர். சிலர்...

மோடியை டுவிட்டரில் பின்தொடர்வதை நிறுத்திய வெள்ளை மாளிகை: காரணம் என்ன?

அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளிநாடு பயணங்களின் போது, சில காலங்களுக்கு மட்டும் வரவேற்கும் நாடுகளின் சில அதிகாரிகளின் ட்விட்டர் கணக்கை ‘ பாலோ’ செய்வதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்கா அதிபர்  டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி கடைசி வாரத்தில் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அந்த நேரத்தில், ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் அலுவலகம், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்தயாவிற்கான அமெரிக்க...

கிம் உயிரோடு தான் இருக்கிறார்! ஆனால்? - முன்னாள் தூதரக அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இந்த கொரோனா காலங்களில் அதிகம் தேடப்படும் நபராக இருக்கிறார் வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன். அவர் வெளியுலக தொடர்பே இல்லாமல் இருப்பதால் பலரும் அவருக்கு என்ன ஆனது என்று சிந்திக்க துவங்கியுள்ளனர். சிலர் அவர் இறந்துவிட்டதாகவும், அவருக்கு இருதய கோளாறு இருப்பதாகவும், சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை நடந்ததாகவும் பல்வேறு வதந்திகளை கூறி வருகின்றனர். ஆனால் அவருடைய தற்போதைய உண்மையான நிலை யாருக்குமே தெரியவில்லை. இந்நிலையில் தென்கொரிய நாடு, வட கொரிய அதிபர் மிகவும்...

பொள்ளாச்சியை போல இன்னொரு ஆபாசக் குப்பை: குண்டர் சட்டத்தில் தள்ளப்பட்ட காசி

பொள்ளாச்சி சம்பவத்தின் வடு இன்னும் மறையாத நிலையில், பல பெண்களின் வாழ்க்கையை பாலியல் ரீதியாக சூறையாடியாது இல்லாமல், அவர்களிடம் பெருமளவில் பணம் பறித்து மோசடி செய்த நபர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி.. வயது 26.. சென்னையில் உள்ள ஒரு காலேஜில் பிஏ படித்துள்ளார்.. படிப்பு முடிந்ததும், நாகர்கோவிலுக்கு காசி வந்துவிட்டார்.. அப்பா நடத்தும் கோழிக்கடையை காசி கவனித்து வந்துள்ளார்.. ஆனால் இவர்...

சுகாதாரத்துறை செயலாளர் தொடர்பான வீடியோ சர்ச்சை - போட்டோகிராபர் மீது எப்ஐஆர் பதிவு

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தொடர்பான எடிட் பண்ணப்பட்ட வீடியோவை, சமூகவலைதளங்களில் பரப்பியது தொடர்பாக, பிரீலாஞ்சர் போட்டோகிராபர் ஸ்ரீராம் என்பவர் மீது சென்னை போலீசார் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் நிலவும் கொரோனா பாதிப்பின் அன்றாட நிகழ்வுகளை, சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் சில நாட்கள் வழங்கி வந்தார். அவர் ஒருநாள் பேசிய வீடியோவில், தமிழகத்தில் பிப்ரவரி மாதத்திலேயே கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவித்திருந்தார்....

இந்தியாவில் 3-வது அல்லது 4-வது லாக்டவுன் வந்தால், பொருளாதாரம் பேரழிவுக்குச் செல்லும்: ரகுராம் ராஜன்

இந்தியாவில் 3-வது அல்லது 4-வது லாக்டவுன் வந்தால், பொருளாதாரம் பேரழிவுக்குச் செல்லும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.  கொரோனாவால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனுடன் ஆலோசித்தார். அப்போது...

சென்னையில் ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக உயர்வு!

https://ns7.tv/ta/tamil-news/tamilnadu-newsslider/30/4/2020/corona-prevalence-doubled-single-week-chennai சென்னையில் ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.   தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் மட்டும் நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 32 மாவட்டங்களில் புதிய தொற்று ஏற்படவில்லை....

வரும் கல்வியாண்டை செப்டம்பரில் தொடங்கலாம்! - யூசிஜி

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்திக் கொள்ளலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு, தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு...

கொரோனாவில் இருந்து குணமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்!

கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து கொரோனா நோய் குணமடைந்து  இரு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்று வீடு திரும்பினர். அவர்களை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பழங்கள் கொடுத்து கை தட்டி வழியனுப்பி வைத்தனர். மேலும், சிறுவர்களுக்கு விளையாட்டு பொருட்களும் கொடுத்து அனுப்பினார்கள். கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்...

டெல்லியின் கோயம்பேடு’ - ஆசாத்பூர் காய்கறிசந்தையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

credit ns7.tv சென்னையில் உள்ள கோயம்பேடு போலவே டெல்லியில் ஆசாத்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் காய்கறி சந்தையானது ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி சந்தையாக சொல்லப்படுகிறது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா, தலைநகர் டெல்லியிலும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. இதனிடையே டெல்லி ஆசாத்பூர் காய்கறி சந்தையில் இதுவரை 11 வியாபாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த...

புதன், 29 ஏப்ரல், 2020

இன்றைய இந்நிகழ்வுகள் 29 04 2020

...

சாதி மூலம் எவரையும் இனி அடையாளம் காணக்கூடாது - ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவு

ஒரு நபரின் சாதி எந்தவொரு நீதி மற்றும் நிர்வாக விஷயத்திலும் குறிப்பிடக்கூடாது என்றும், இது “அரசியலமைப்பிற்கு எதிரானது” என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெய்ப்பூர் பெஞ்ச் விசாரித்த 2018 வழக்கை குறிப்பிடும்போது நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது “குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் பிற நபர்களின் சாதி இந்த நீதிமன்றத்தின் பதிவகத்தின் அதிகாரிகள் / அதிகாரிகள் மற்றும் நீதித்துறை மற்றும் நிர்வாக விவகாரங்களில் துணை நீதிமன்றங்கள் / சிறப்பு...

சார்ஜ் போட்டுக் கொண்டு வீடியோ கால்: மொபைல் வெடித்து இளம் பெண் காயம்

சார்ஜ் போட்டுக் கொண்டே செல்போனில் வீடியோ கால் பேசிய போது, ஃபோன் சூடாகி வெடித்து இளம்பெண் காயமடைந்திருக்கிறார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர் சு****ர். இவர் வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். இவருடைய மகள் *** தி வயது 18. கொரோனா பாதிப்பு அனைவரையும் பீதியில் ஆழ்த்தியிருக்கும் நிலையில்,  நேற்று காலை தனது தந்தையுடன், செல்போனில் வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார் ஆர்த்தி. பலரும் செய்வதைப் போன்று, செல்போனை சார்ஜ் போட்டுக்கொண்டே...

மே 2-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

இந்தியாவின்  இரண்டாவது பொது முடக்க நிலை வரும் மே 3ம் தேதியுடன் முடிவடையும் தருவாயில், கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை  1,000 ஐத் தாண்டியுள்ளது.  தற்போதைய நிலவரத்தின்படி நோய்த் தாக்குதல் ஏற்பட்டவர்களில் 7,695 பேர் குணமாகியுள்ளனர்.  நாட்டில் 31,332 பேருக்கு கோவிட்-19 தாக்குதல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. tulladhநாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 11,106 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,400...

பச்சை மண்டலங்களில் தொழில் துவங்க தமிழக அரசு அனுமதி!

கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வயிலாக ஆலோசனையில் ஈடுப்பட்டார்.  அப்போது, அனைத்து மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், முழு ஊரடங்கு பலனளித்ததா என்பதும் பற்றியும் முதல்வர் பழனிசாமி கேட்டறிந்தார். சென்னை உட்பட 5 மாநகராட்சிகளில் அமல்படுத்தப்பட்ட...

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

இன்றைய இந்நிகழ்வுகள் 28 04 2020

...