திங்கள், 27 ஏப்ரல், 2020

சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

Image
சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்துவதற்கான காலஅவகாசத்தை 3 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சி உள்பட தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய, சொத்து வரி, குடிநீர் கட்டணம் போன்றவை செலுத்துவதற்கான கால அவகாசம் வரும் ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இந்த வரிகளை செலுத்துவதற்கு 3 மாத கால அவகாசம் கொடுக்கப்படும் என  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார். இந்நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எந்தவித அபராத கட்டணமும் இன்றி இந்த கால அவகாசம் அளிக்கப்படுவதாக தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
credit ns7tv