செவ்வாய், 21 ஏப்ரல், 2020

மும்பையில் பத்திரிக்கையாளர்கள் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

மும்பையில் பத்திரிக்கையாளர்கள் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்து 656 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 842 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 559 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் 4 ஆயிரத்து 203 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 223 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மும்பையில் பத்திரிகையாளர்கள் 171 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் என களத்தில் பணியாற்றிய 53 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
Mumbai


டெல்லில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழப்பு 45 ஆக அதிகரித்துள்ளது. குஜராத்தில் பாதிப்பு மளமளவென உயர்ந்துவரும் நிலையில், உயிரிழப்பு 67 ஆக உயர்ந்துள்ளது. இதே போல, ஆயிரத்து 500க்கும் குறைவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள மத்திய பிரதேசத்தில் 74 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
credit ns7.tv