செவ்வாய், 21 ஏப்ரல், 2020

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவுக்கு 47 பேர் உயிரிழப்பு!

Image
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவுக்கு 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனாவுக்கு புதிதாக ஆயிரத்து 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18ஆயிரத்து 601ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பலி எண்ணிக்கை 47ஆக அதிகரித்ததால், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 590ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு மட்டும் 4ஆயிரத்து 666 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 232 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தலைநர் டெல்லியில் 2 ஆயிரத்து 81 பேர் பாதிப்பட்டுள்ளனர்.அங்கு மட்டும் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
credit ns7.tv