திங்கள், 30 நவம்பர், 2020

கட்சியை தடை செய்ய பாஜக விரும்புகிறது: மெஹபூபா முப்தி

 ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், காஷ்மீர் மாநில முதல் பெண் முதல்வருமான மெஹபூபா முப்தி, “ஜம்மு காஷ்மீரில் எதிர்ப்பு குரல்கள் நசுக்கப்படுவதாகவும், ஜனநாயகமற்ற சூழலை பாஜக உருவாக்கி வருவதாகவும்  குற்றம் சாட்டினார்”.மெஹபூபா முப்தி,“அவர்கள் என்னை முடக்க நினைக்கிறார்கள். எனது கட்சியை தடை செய்ய விரும்புகிறார்கள். வீட்டுச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370- ஐ ரத்து செய்தது குறித்து தொடர்ச்சியாக...

சூடு பிடிக்கும் தேர்தல் களம்: தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை

 Election 2021: வரும் 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி.தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இருபெரும் கட்சிகளான திமுக-வும் அதிமுக-வும் அதன் மூத்த தலைவர்கள் இல்லாமல் இந்த தேர்தலை எதிர்கொள்கின்றன. அதனால் அடுத்து ஆட்சியைப் பிடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல்வாதிகளிடமும், பொதுமக்களிடமும் அதிகரித்துள்ளது. அதிமுக-வுடன் கூட்டணி தொடரும் என பாஜக...

ஹத்ராஸ் கூட்டு பாலியல் வழக்கு: மூளை பிங்கர்பிரிண்டிங் சோதனை என்றால் என்ன?

 சனிக்கிழமை (நவம்பர் 21), உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ்-ல் தலித் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்ட  நான்கு பேரையும் காந்திநகர் நகரில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்திற்கு (எஃப்எஸ்எல்) வந்து சேர்ந்தது.நான்கு பேரிடமும் மூளை பிங்கர்பிரிண்டிங் சோதனை நடத்தப்படுகிறது. கடந்த திங்களன்று, பிஇஒஎஸ்பி (BEOSP) என்ற சொல்லப்படக் கூடிய இந்த சோதனைக்கு, குற்றம் சாட்டப்பட்ட ...

புதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை?

 Weather Tamil News, Tamil Nadu New Cyclone Puravi: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தென் தமிழகத்தை நோக்கி நகருகிறது. இதனால் தமிழகத்திற்கு மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தத் தேதிகளில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்கிற விவரத்தை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.நிவர் புயல், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு நல்ல மழை கொடுத்தது. இதைத் தொடர்ந்து வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம்...

திராவிட அரசியலும்…. அம்மன் படங்களும்!

 தமிழ் சினிமாவின் முக்கிய அங்கமாக அம்மன் படங்கள் திகழ்கின்றன. தமிழில் வெளிவந்த முதல் ஒலியில்லா திரைப்படம் கூட ‘கீசக வதம்’ எனும் பக்தி படம் தான். 1918ம் ஆண்டு இத்திரைப்படம் திரையிடப்பட்டது.தமிழ் சினிமாவில் அம்மன் படங்கள் வெறும் பக்தியோடு நிற்கவில்லை. மாறாக, பெண்ணிய நீதி குறித்த ஜனநாயக வாசத்தை தட்டி எழுப்புகிறது. தமிழ்நாட்டில் நடுத்தர வர்க்க மக்களை அடையாளப்படுத்தியது அம்மன்...

ஞாயிறு, 29 நவம்பர், 2020

கர்நாடகாவில் சாதி அடிப்படையில் வாரியங்கள் அமைப்பதன் பின்னணி அரசியல் என்ன?

 The politics of creating community-based corporations in Karnataka : கர்நாடகாவில் ஆட்சி அமைத்திருக்கும் பாஜக அரசு சமீபத்தில் மூன்று வாரியங்கள் மற்றும் கார்ப்பரேசன்களை அமைத்து குறிப்பிட்ட சாதிகள் மற்றும் மொழி பிரிவினரின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து மேற்பார்வையிட இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த மேம்பாட்டு கார்ப்பரேசனில் லிங்காயத்து வீரசைவ பிரிவும் அடங்கும் (முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவும் இந்த பிரிவை சேர்ந்தவர்)லிங்காயத்து பிரிவினருக்கு...

சிறையில் ஒரு ”ஸ்ட்ராவுக்காக” காத்திருக்கும் 83 வயது சமூக செயற்பாட்டாளர்!

 Stan Swamy, 83, waits as the buck is passed on his sipper and straw :  உபா சட்டத்தின் கீழ் தேசிய விசாரணை முகமையால் கைது செய்யப்பட்ட ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும், பாதிரியாருமான 83 வயது ஸ்டான் ஸ்வாமியின் ஒரு ஸ்ட்ரா மற்றும் சிப்பர் கோப்பைக்கான வேண்டு கோள் எவ்வாறு சட்ட நடைமுறைகள் உணர்ச்சியற்றதாக இருக்கிறது என்பதை எடுத்துக் கூறும் வழக்காக உள்ளது. எல்கர் பரிஷாத் வழக்கில் அக்டோபர் 7ம் தேதி கைது செய்யப்பட்ட அவரின் வேண்டுகோள்...

சனி, 28 நவம்பர், 2020

டெல்லி சலோ” : தடையை மீறும் விவசாயிகள்; சமாதானம் பேச அழைக்கும் அமைச்சர்கள்

டெல்லி சலோ” : தடையை மீறும் விவசாயிகள்; சமாதானம் பேச அழைக்கும் அமைச்சர்கள் Delhi Chalo’ against farm laws: Farmers cross barricades, water jets; Tomar, Rajnath offer talks : ஹரியானா மற்றும் பஞ்சாபில் இருந்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் வழியாக டெல்லி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர் விவசாயிகள். மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர்...

இந்தியாவின் 2வது காலாண்டு ஜிடிபி 7.5% ஆக சரிவு; மந்தநிலைக்கு செல்லும் பொருளாதாரம்

 மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தற்காலிக மதிப்பீடுகளின்படி, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 23.9 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. அதையடுத்து, ஜூலை-செப்டம்பர் காலாண்டில் (2வது காலாண்டு) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவீதம் சுருங்கியது. 2019-20ம் ஆண்டின் இதே காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது.சமீபத்திய நிகழ்வின் மூலம், இந்திய பொருளாதாரம் வரலாற்றில்...

வெள்ளி, 27 நவம்பர், 2020

கடலூர், புதுச்சேரிக்கு அதிக மழை: நிவர் உருவாக்கிய பாதிப்புகள்

 Nivar Cyclone: அதி தீவிர புயலான ‘நிவர்’ நவம்பர் 25 இரவு 11.30 மணி முதல் நவம்பர் 26 அதிகாலை 2.30 மணி வரை 120-130 கிமீ வேகத்தில் கரையைக் கடந்தது. இதனால் வட கடலோர மற்றும் உள் தமிழகம் முழுவதும் கடுமையான காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.அதிகாலை 2.30 மணியளவில் கரையைக் கடந்த நிவர் புயல், வடமேற்கு நோக்கி நகர்ந்து மூன்று மணி நேரத்திற்குள் வலுவிழக்கும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். புயல் கரையைக் கடந்த நேரத்தில் கடலூர், காரைக்கல், புதுச்சேரி, நாகப்பட்டினம்...

மாநிலங்களின் அமைச்சரவைகளில் முஸ்லீம்களின் நிலை என்ன?

மாநிலங்களின் அமைச்சரவைகளில் முஸ்லீம்களின் நிலை என்ன? கடந்த வாரம், பீகார் மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் 15 உறுப்பினர்களைக் கொண்ட  மாநில அமைச்சரவை பொறுப்பேற்றது. பல தசாப்தங்களுக்குப் பிறகு பீகார் அமைச்சரவையில் ஒரு இஸ்லாம் அமைச்சர் இல்லாதது இதுவே முதல் முறையாகும்.பீகார் மாநிலத்தைப் போன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் மாநிலங்கள் ஒருபுறம் இருக்க, ...