ஞாயிறு, 15 நவம்பர், 2020

தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்

 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பரவலான மழை பெய்யும் என்றும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக,  காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி  ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை மையம் கூறியுள்ளது. இதேபோல், நாளை, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, ராமாநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.