செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

அளவுக்கு அதிகமான ஊக்கபானம்... 16 வயது பெண் மாரடைப்பால் உயிரிழப்பு

மெக்சிகோவில் அளவுக்கு அதிகமாக ஊக்கபானம் உட்கொண்ட 16 வயது பெண் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1
மெக்சிகோ நாட்டில் உள்ள 16 வயதான லன்னா ஹமான் என்னும் பெண் கடற்கரையில் தனது நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாட சென்றிருந்தார். அப்போது அவர் தொடர்ந்து அளவுக்கு அதிகமாக ஊக்க பானங்களை உட்கொண்டுள்ளார்.
இதனை அடுத்து சிறிது நேரத்திலேயே அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தண்ணீருக்கு பதிலாக ஊக்க பானம் அளவுக்கு அதிகமாக உட்கொண்டது தெரிய வந்தது. இதனால் மாரடைப்பு ஏற்பட்டு உடனே லன்னாவின் உயிர் பிரிந்தது என விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

Related Posts: