செவ்வாய், 21 மார்ச், 2017

பழி வாங்கும் மத்திய அரசு !! ஜாகிர் நாயக்கின் 18 கோடி சொத்து முடக்கம்!!! ஆட்டய போடும் அமலாக்கதுறை !

மும்பை:மதபோதகர் ஜாகிர் நாயக்கின் 18 கோடிரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. மும்பையைச் சேர்ந்த மதபோதகர் ஜாகிர் நாயக், 51.
கடந்த சில வருடங்களுக்கு முன் வங்கதேச தலைநகர் தாகாவில், பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில் 22 பேர் பலியாயினர். ஜாகிர் நாயக்கின் தூண்டுதலான டி.வி. பேச்சால் இத்தாக்குதல் நடந்ததாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, ஜாகிர் நாயக் நடத்தி வரும் சர்ச்சைக்குரிய, ‘பீஸ் டிவி’ சேனலுக்கு, வங்கதேச அரசு தடை விதித்தது
இவர் மீது இந்தியாவில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு தொடர்ந்தது. மார்ச் 14-ல் ஆஜராக சம்மன் அனுப்பியது.
 
அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து இவரது அமைப்புகள் கண்காணிக்கப்பட்ட வந்த நிலையில் ஜாகிர் நாயக்கின் ரூ.18 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Related Posts: