செவ்வாய், 21 மார்ச், 2017

கார்பரேட்களின் சதி ? தெருவோர கடைகளுக்கு விரைவில் தடை! துணை போகும் மோடி அரசு !

பெங்களூர்: கர்நாடகாவில் தெருவோர கடைகளுக்கு விரைவில் தடை விதிக்க போவதாக மேலவையில் சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் குமார் தெரிவித்தார். தடை கர்நாடகா சட்டமன்ற மேலவையில் பாஜ உறுப்பினர் ராமச்சந்திர கவுடா கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ்குமார், உணவுப் பொருட்கள், குறிப்பாக சீன வகை உணவுப் பொருட்களான கோபி மஞ்சூரியன் போன்றவை சுவையாக இருப்பதற்காக கையேந்தி பவன்களை நடத்துபவர்கள் ஆபத்தான சுவையூட்டிகளையும், ரசாயனங்களையும் சேர்ப்பதாக தெரிய வந்ததை அடுத்து கர்நாடக அரசு இக்கடைகளை மூட தீவிரமாக சிந்தித்து வருகிறது சுவையூட்டி கடையை நடத்துபவர்கள் மோனோ சோடியம் மற்றும் லோடோமேட் போன்ற செயற்கையான சுவையூட்டுகளை சேர்க்கின்றனர்.
 
இச்செயற்கையான சுவையூட்டிகள் இவற்றை உண்ணும் மனிதர்களுக்கு ஆபத்தை உருவாக்கும். இவற்றின்  பயன்பாடுகளை கட்டுப்படுத்த அரசு விதிமுறைகளை வகுக்கும் என்று கூறிஉள்ளார்.