
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் வழக்கம்போல் இந்தாண்டும் மாணவியரே அதிகளவில் தேர்ச்சி வெற்றி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களில் 92 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மார்ச் இரண்டாம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற்றன. பள்ளிகளிலும், தனியாகவும் சேர்த்து மொத்தம் 9 லட்சத்து 33 ஆயிரத்து 690பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
தேர்வு எழுதியவர்களில் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிடப் 0.7 சதவீதம் கூடுதலாகும். 94.5 விழுக்காடு மாணவியரும், 89.3 விழுக்காடு மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1,813 பள்ளிகள் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. இவற்றில் 292 அரசு பள்ளிகளாகும்.
தமிழகத்தில் மார்ச் இரண்டாம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற்றன. பள்ளிகளிலும், தனியாகவும் சேர்த்து மொத்தம் 9 லட்சத்து 33 ஆயிரத்து 690பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
தேர்வு எழுதியவர்களில் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிடப் 0.7 சதவீதம் கூடுதலாகும். 94.5 விழுக்காடு மாணவியரும், 89.3 விழுக்காடு மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1,813 பள்ளிகள் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. இவற்றில் 292 அரசு பள்ளிகளாகும்.