வியாழன், 25 மே, 2017

பாலிமர் TV ஆசிரியர் மற்றும் செய்தியாளர் மீது போலீசார் வழக்கு

பாலிமர் TV ஆசிரியர் மற்றும் செய்தியாளர் மீது போலீசார் வழக்கு!

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகிலுள்ள விலாரிபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது 2 மாணவி ஒருவரும் அவருடைய இரு தோழிகளும் கடந்த மாதம் வீட்டை விட்டு ஓடி விட்டனர்.
இது குறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார் அடுத்த இரு நாளில் மாணவியையும் அவரது தோழிகளையும் மீட்டனர்.
தனது தந்தை மற்றும் சித்தப்பா இருவரும் மாணவியை பாலியல் சித்ரவதை செய்ததாகவும், இதனால் தான் வீட்டை விட்டு ஓடியதாகவும் மாணவி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து மாணவியின் தந்தையை வாழப்பாடி போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். தற்போது அவர் பிணையில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மே 8-ம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளிக்க சென்ற அம்மாணவியை பேட்டி கண்ட பாலிமர் தொலைக்காட்சி செய்தியாளர் வினோத்குமார் என்பவர், மாணவியின் பேட்டியை 8,9 – தேதிகளில் தொலைக் காட்சியில் ஒளிபரப்பு செய்துள்ளார்.
உச்ச நீதி மன்ற உத்தரவுப்படி பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இளம் பெண்கள் மற்றும் குழந்தைகள் படம் மற்றும் பேட்டியை பகிரங்கமாக காட்சிப்படுத்தக் கூடாது உச்ச நீதி மன்றத்தின் உத்தரவை மீறி செயல்பட்டதால் பாலிமர் தொலைகாட்சியின் சேலம் நிருபர் வினோத், செய்தியாசிரியர் மற்றும் உரிமையாளர் ஆகியோர் மீது, இந்திய தண்டனை சட்டம் 288 (ஏ) மற்றும் ரிட் வித் 66(ஏ) ஐ.டி. ஆக்ட் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தனியார் தொலைகாட்சி நிருபர், செய்தியாசிரியர் மற்றும் உரிமையாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை செய்தியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.