வியாழன், 10 ஆகஸ்ட், 2017

​கூகுள் நிறுவனத்தில் பாலின பாகுபாடு காட்டப்படுவதாக புகார் கூறிய பொறியாளர் பதவி நீக்கம்..!! August 09, 2017

​கூகுள் நிறுவனத்தில் பாலின பாகுபாடு காட்டப்படுவதாக புகார் கூறிய பொறியாளர் பதவி நீக்கம்..!!


கூகுள் நிறுவனத்தில் ஆண் - பெண் பாகுபாடு காட்டப்படுவதாக கூறிய அந்நிறுவனத்தின் பொறியாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் கணினி உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டில் பொறியாளராக பணிபுரிபவர் ஜேம்ஸ் டோமோர். இவர் கடந்த வாரம் அந்நிறுவனத்தில் நடக்கும் பாலின பாகுபாடு குறித்து அறிக்கை ஒன்றை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். 

அதில், நிறுவனத்தில் ஆண்-பெண் பாகுபாடு அதிகம் பார்க்கப்படுகிறது என்றும், பெண்களுக்கு தொழில்நுட்பத்துறை மற்றும் தலைமை பொறுப்பு போன்ற பதவிகளை கொடுக்க மறுக்கின்றனர் என எழுதியிருந்தார். 

ஜேம்ஸ் டோமோரின் இந்த அறிக்கை உலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக ஜேம்ஸை வேலையை விட்டு நீக்கியது கூகுள். 

இது குறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறுகையில், ஜேம்ஸ் அனுப்பிய அறிக்கையில் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு எதிராக மற்றும் பாலின வேறுபாட்டை பற்றி வரம்பு மீறி எழுதியுள்ளார் என்றும், அதனால் அவரை பதவி நீக்கம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts:

  • சல்லிக்கட்டுக்குத் தடை. நோக்கம் என்ன? Read More
  • 2-வது இடத்தில் இந்தியா! உலகிலேயே அதிக அளவில் பழங்களை உற்பத்தி செய்வதில் 2-வது இடத்தில் இந்தியா! புதுடெல்லி,  உலக அளவில் பழங்களை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகள… Read More
  • கச்சா எண்ணெய்யை ஈரான் ஒரு நாளைக்கு 5 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்ய உத்தரவு ! துபை,  ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்து பொருளாதார தட… Read More
  • நாகபுஷ்ப்பம் இமயமலை பகுதியிலுள்ள நாகபுஷ்ப்பம். இது 36 ஆண்டுக்கொருமுறையே பூக்கும் அபூர்வஇனம். வெள்ளிக்கிழமை காலை 3.30 க்கு எடுக்கப்பட்ட புகைப்படம். … Read More
  • ரோபோக்களின் அதிகரிப்பால் ரோபோக்களின் அதிகரிப்பால் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் சுமார் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடும் ஆபத்து ! தாவோஸ்,  சமீபகாலமாக, தொழிலாளர்… Read More