Home »
» 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு! May 24, 2018
3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இணைய சேவையை தடை செய்யக்கூடாது எனக்கோரி, சூரிய பிரகாசம் என்ற வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், போராட்டத்தின்போது காயம் அடைந்தவர்களை அடையாளம் காண மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும், இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் நீதிபதி பவானி சுப்பராயன் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
Related Posts:
ஏ.கே.ராஜன் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல் என்ன? 14.07.2021 ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு, தமிழ்நாடு அரசிடம் இன்று காலை வழங்கிய அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறித்த தகவல் வ… Read More
மேற்கு மாவட்டங்களில் திமுகவை பலப்படுத்த மாஸ்டர் பிளான் சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கோவை, தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 9 மாவட்டங்கள் மேற்கு மாவட்டங்கள் அல்லது கொங்கு மண்டலம் என அ… Read More
புதுச்சேரியை போல தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி14/07/2021 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக புதுச்சேரி அரசின் முயற்சிகளை தமிழக அரசு கூர்ந்து கவனித்து வருவதாக பள்ளிக்கல்வித்துற… Read More
கொரோனா: கடைகளில் உணவு பொருட்கள் வாங்கும் முறையை எவ்வாறு பாதித்தது? கொரோனா தொற்று சாதாரண வாழ்க்கையின் பல்வேறு விஷயங்களை மாற்றியுள்ளது. உதாரணமாக மக்கள் எப்படி உணவு பொருட்கள் வாங்கினார்கள் என்பது உட்பட பல மாற்றங்கள… Read More
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28% ஆக உயர்வு – அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்14.07.2021 மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, அகவிலைப்படி (டிஏ) (Dearness Allowness) மற்றும் அகவ… Read More