வியாழன், 31 மே, 2018

போர்ட்டோ ரிகோவை தாக்கிய மரியா புயல் May 31, 2018

கடந்தாண்டு வீசிய மரியா புயல் காரணமாக போர்ட்டோ ரிகோவில் 4 ஆயிரத்து 645 பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் சுயாட்சி அதிகாரம் பெற்ற போர்ட்டோ ரிகோ தீவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரியா புயல் தாக்கியது. 90 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் வலுவான இந்த புயல் தீவை சின்னாபின்னமாக்கியது.

இதில் 64 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனிடையே, ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசுத் தரப்பில் கூறிய எண்ணிக்கையைவிட 70 மடங்கு அதிகமாக, அதாவது 4600க்கும் மேற்பட்ட நபர்கள் இறந்திருப்பதாக தெரியவந்துள்ளது.