திங்கள், 21 மே, 2018

நாளை மறுநாள் வெளியாகிறது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் May 21, 2018

Image

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், திட்டமிட்டபடி நாளை மறுநாள் வெளியாகின்றன.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் தொடங்கி, ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெற்றன. இத்தேர்வை,  10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர். இதையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணிகள், கடந்த 6-ம் தேதியுடன் நிறைவு பெற்று, இறுதி மதிப்பெண் பட்டியல் மற்றும் தேர்வு முடிவுகள் தயாரிக்கப்பட்டன.

இந்நிலையில், தேர்வு முடிவுகள், திட்டமிட்டபடி, 23-ம் தேதி வெளியிடப்பட உள்ளன. தேர்வு முடிவுகளை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் தெரிவித்துள்ள, செல்போன் போன் எண்ணுக்கு, தேர்வு முடிவுகள், எஸ்.எம்.எஸ். ஆக, மதிப்பெண் விபரங்களுடன் அனுப்பப்படும் என பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.