வியாழன், 17 மே, 2018

ரமலான் நோன்பு தொடங்கியது! May 17, 2018

ரமலான் நோன்பு இன்று தொடங்கும் என்று,  தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முஹம்மது அய்யூப்  அறிவித்துள்ளார்.

நேற்று மாலை சரியாக 6.37 மணிக்கு பிறை தென்பட்டதால்,நோன்பை இன்று முதல் கடைபிடிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தலைமை ஹாஜி அறிவிப்பை தொடர்ந்து, நேற்றிரவு அனைத்து பள்ளிவாசல்களிலும் தராவீஹ் எனும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 

இஸ்லாமிய மாதமான ரமலான் மாதத்தில் 30 நாட்களும் நோன்பு நோற்று, 5 வேளை தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபடுவார்கள். நோன்பின் இறுதி நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.