வியாழன், 17 மே, 2018

எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டது பற்றி ராகுல்காந்தி விமர்சனம் May 17, 2018

Image

கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டது இந்திய அரசியல் சாசனத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, பாஜகவின் பகுத்தறிவற்ற வலியுறுத்தல் காரணமாக கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆட்சி அமைக்க தேவையான எம்எல்ஏக்கள் இல்லாத போதும், பாஜக கர்நாடகாவில் ஆட்சி அமைத்துள்ளது, அரசியல் சாசனத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்றும் அவர் விமர்சித்துள்ளார். 
 
The BJP’s irrational insistence that it will form a Govt. in Karnataka, even though it clearly doesn’t have the numbers, is to make a mockery of our Constitution.

This morning, while the BJP celebrates its hollow victory, India will mourn the defeat of democracy.

கர்நாடகாவில் பாஜகவினரின் போலி கொண்டாட்டம் இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட தோல்வி என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.