வியாழன், 31 மே, 2018

குற்றாலத்தில் களைக்கட்டும் கோடை சீசன் May 31, 2018

தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவ மழை துவங்கியதை அடுத்து, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், செங்கோட்டை தென்காசி சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
Image

இதனால் குற்றாலம் மெயினருவியில், தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயினருவி மற்றும் ஐந்தருவி பழைய குற்றாலம் ஆகியவற்றில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.


குற்றாலத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர், அருவிகளில் நீர்வரத்தும், சீசனும் வந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே, மெயினருவியின் கரையில் போதியளவில் காவல்துறை பாதுகாப்பு இல்லாததால், சுற்றுலா பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.