Home »
» ஆட்சியை பிடித்துவிடலாம் என நடிகர்கள் தப்பு கணக்கு போட கூடாது : திருநாவுக்கரசர் May 19, 2018
கூட்டம் கூடுவதை பார்த்து ஆட்சியைப் பிடித்துவிடலாம் என நடிகர்கள் தப்புக் கணக்கு போடக் கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளிடையே பேசிய திருநாவுக்கரசர், 3வது அணி அமைத்தால் அது மக்களிடையே எடுபடாது எனக் கூறினார். பாஜகவை ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சியால்தான் வீழ்த்த முடியும் என்றார்.ரஜினிக்கும், கமலுக்கும் அரசியலில் மக்களிடையே எவ்வாறு வரவேற்பு இருக்கிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறிய திருநாவுக்கரசர், கூட்டம் கூடுவதை மட்டுமே வைத்து ஆட்சியை பிடித்து விடலாம் என நடிகர்கள் தப்புக் கணக்கு போடக் கூடாது என்றார். இதற்கிடையே கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரசின் தற்போதைய தலைவர் தெய்வேந்திரன் முன்னாள் தலைவர் குட்லக் ராஜேந்திரன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது திருநாவுக்கரசர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி வைத்தார்.
Related Posts:
எல்லையில், இந்திய - சீன ராணுவத்தினர் இடையே கடும் மோதல்! August 20, 2017
சுதந்திர தினத்தன்று இந்தியா-சீனா எல்லையில் இருநாட்டு ராணுவப்படையினரும் அடித்துக்கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்தியா… Read More
அஸ்ஸாமில் வெள்ளம் - தேசிய பூங்காவில் அழியும் விலங்குகள்! August 19, 2017
அஸ்ஸாம் மாநிலம் 10 நாட்களாக வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. பல ஆயிரம் மக்களை பாதித்துள்ள இந்த வெள்ளம், காசிரங்கா தேசிய பூங்காவிலும் க… Read More
எங்களை சீண்டாத வரையில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை” : வடகொரியா August 19, 2017
தங்களின் அணு ஆயுத சோதனைகளைக் கண்டு உலக நாடுகள் பதற்றமடைய வேண்டாம் எனவும், தங்களின் இலக்கு அமெரிக்கா மட்டும் தான் எனவும் வடகொரியா அறிவி… Read More
உலகின் 15 ஆயிரம் அணு ஆயுதங்கள்! August 19, 2017
உலகின் ஒன்பது நாடுகளில் 15ஆயிரம் அணு ஆயுதங்கள் இருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.உலகில் அணுஆயுத வல்லமை படைத்த ரஷ்யா, அமெரி… Read More
அரசு விழாவுக்கு அனுப்பப்பட்ட பேருந்துகள் - 16 கி.மீ நடந்து சென்ற பள்ளி மாணவர்கள்! August 19, 2017
திருவாரூர் அருகே பேருந்துகள் இயக்கப்படாததால், அரசுப் பள்ளி சுமார் 500 பேர் மாணவர்கள் 16 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றனர்.எம்.ஜி.ஆர் நூற்றாண… Read More