புதன், 30 மே, 2018

களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பு! May 30, 2018

Image

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால், களக்காடு தலையணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கோடை வெயிலின் தாக்கத்தால், திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணையை ஒட்டிய நீர்நிலைகள் வறண்டு காட்சியளித்தன.

தற்போது பெய்து வரும் மழையால், வறண்டு கிடந்த பச்சையாறு, நாங்குநேரியான் கால்வாய் மற்றும் உப்பாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் அங்கு குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். தடுப்பணையை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால், அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.