ஞாயிறு, 27 மே, 2018

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மீது: கனிமொழி குற்றச்சாட்டு May 27, 2018

Image

தூத்துக்குடியில் 100 நாட்கள் போராட்டம் நடைபெற்றபோது தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வராததே அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் என திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே அபிவிருத்திஸ்வரம்-கமுககுடி இணைப்பு பாலத்தை திறந்துவைத்த கனிமொழி, 7 ஆண்டுகளுக்கு பின் இந்த பாலம் திறக்கப்பட்டது வெற்றி தான் எனக் கூறினார்.

144 தடை உத்தரவு இருந்ததால் தான் தூத்துக்குடி செல்லவில்லை என ஆட்சியாளர்கள் கூறுவதை ஏற்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கூத்தாநல்லூர் சென்ற கனிமொழி செய்தியாளர்களிடம் பேசியபோது, தூத்துக்குடி சம்பவம் குறித்து ஒரு ட்வீட் கூட போடாத பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சவால் விட்டுகொண்டிருப்பதாக விமர்சித்தார்.