வெள்ளி, 25 மே, 2018

​தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 65 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு! May 25, 2018

தூத்துக்குடியில் கடந்த இரு தினங்களாக போலீசாரால் கைது செய்யப்பட்ட 65 பேரை விடுவித்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, தூத்துக்குடியில் போலீசார் கடுமையான சோதனையில் ஈடுபட்டனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி, 65 பேரை கைது செய்தனர். 

அவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை செய்த பின்னர், மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாட திரளான வழக்கறிஞர்கள் குவிந்திருந்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டரிந்த நீதிபதி சாருஹாசனி, கைது செய்யப்பட்டவர்களை அவர்களது சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார். மேலும், காவல்துறையினர் தாக்கினார்களா என்றும் வாக்குமூலம் பெறப்பட்டது. 
Image