சனி, 26 மே, 2018

ராட்சத பலூன் மூலம் இயற்கை அழகை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்! May 26, 2018

Image

மேட்டுப்பாளையத்தில், இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளை ராட்சத பலூனில் பறந்தபடி கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். 

தமிழகத்தில் சீரான சீதோசனநிலை மற்றும் அளவான காற்று வீசும் சூழல், மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சியில் மட்டுமே இருப்பதால், அங்கு ஆண்டுதோறும்  ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டு வருகிறது. அதன்படி மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் பூங்காவில் ராட்சத பலூன் மூலம் வானில் பறந்து செல்லும் சாகச விளையாட்டு நிகழ்ச்சி இன்று தொடங்கியது. 

பல வண்ணங்கள் கொண்ட ராட்சத பலூனில் ஏறி அமர்ந்து கொள்ளும் சுற்றுலா பயணிகள், ராட்சத பலூன் மெல்ல மெல்ல வானுயர எழுவதை உற்சாகத்துடன் அனுபவித்து வருகின்றனர். இந்த சாசக விளையாட்டு, இந்திய விமானப்படையின் பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில்,  அத்துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டும் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.