வெள்ளி, 25 மே, 2018

அணு ஆயுத சோதனை மையங்கள் தகர்ப்பு May 25, 2018

ஏற்கனவே அறிவித்தபடி அணு ஆயுத சோதனை மையங்களை வட கொரியா வெடி வைத்து தகர்த்துள்ளது.

தென் கொரியா மற்றும் அமெரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில், இதற்கான அறிவிப்பினை வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் அறிவித்திருந்தார்.

அதன்படி, நாட்டின் 3 பகுதிகளில் உள்ள அணு ஆயுத சோதனை மையங்களை வட கொரியா நேற்று வெடி வைத்து தகர்த்தது.

ரஷ்யா, சீனா, தென் கொரியா, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் முன்னிலையில், 3 அணு ஆயுத சோதனை மையங்களும் வெடி வைத்து தகர்க்கப்பட்டன.

அணு ஆயுத சோதனை மையங்கள் பாதுகாப்பான முறையில் தகர்க்கப்பட்டதாக வட கொரிய அணு ஆயுத உற்பத்தி மையத்தின் துணை இயக்குநர் தெரிவித்தார். 

Image

Related Posts: