புதன், 13 பிப்ரவரி, 2019

அழிந்து வரும் நீர் நிலை

13/2/2019 முக்கணாமலைப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம். சுமார் 4500 முதல் 5000 பேர் வாழும் சிறு கிராமம். இங்கு நான்கு நீர் நிலைகள் உள்ளது, அதில் ஒன்று தாமரை குளம் - தற்போதும் பராமரிக்கப்பட்டு குடிநீர் தேவைக்கும் மட்டும் பயன் படுத்தப்டுகிறது,  எலிமெட்ரி பள்ளி அருகில் அமைத்துள்ள குளம், நீர் இருந்த போதிலும் முற் புதராக கட்சி அளிக்கிறது. விவசாயத்திற்கு பயன்படும் வகையில் நீர் இருந்தாலும் , பயன் படுத்துவார் எவருமில்லை.  அடுத்துள்ளது செங்குளம், இதில் நீர் காண்பது அரிதாகவுள்ளது, பஞ்சாயத்து மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைத்துள்ளது , பராமரிப்பு இன்மையால் , இந்த பகுதியில் சேரும் மலை நீர் சக்கரன்குளம் செண்டரைக்கிறது, ஊரில் உள்ள பெரும்பாலான மலை நீர் சேரும் இடமாக சகரான்குளம் உள்ளது. ஏராளமான மழைநீர் சேருமிடமாக சகரான்குளம் இருந்தபோதிலும் அங்குள்ள நீர், சாக்கடை நீர், கழிவு நீர் , மனித கழிவு  என கலந்து நீரை மாசுபட செய்துள்ளது. நமது ஆய்வின்படி 60து கும் மேற்பட்ட வீடுகளில்    சாக்கடை நீர், கழிவு நீர் நேரடியாக , மழைநீர் வடிகால் கால்வாய் இல் கலக்கிறது. இதை பஞ்சாயத்து கண்டுகொள்வதில்லை. ஒரு காலத்தில் சங்கரன்குள நீர் மீன் வளர்த்து பஞ்சாயத்து வருவாய் ஈட்டியது, இந்த தா நீர் விவசாயத்திற்கு பயன் பட்டது, தற்போது கழிவு நீராக காட்சியளிக்கிறது. பல நோய்  தொற்று உருவாகும் அபாயம் உள்ளதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவை அனைத்திற்க்கும் மேலாக சக்கரன்குளம் நீர் நிலை பலவகை கழிவு   கொட்டி அளிக்கப்படுகிறது .
( நேரடி காலா ஆய்வு - IndiaWPRC)