சனி, 16 பிப்ரவரி, 2019

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தொடக்கம்! February 15, 2019

Image
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் இன்று தொடங்கியுள்ள நிலையில் அனைத்து தேர்வு மையங்களிலும் சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கப்படுகிறது. 
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று முதல் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த தேர்வுகளை நாடுமுழுவதும் உள்ள 21 ஆயிரத்து 400 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். முதன்முறையாக நாடு முழுவதும் 4 ஆயிரத்து 974 தேர்வு மையங்களும் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. 
வழக்கமாக தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற்று முடிவுகள் ஜூன் மாதம் அறிவிக்கப்படும். ஆனால் முக்கிய கல்வி நிறுவனங்களின் சேர்க்கை முன்னதாகவே முடிந்து விடுவதாக புகார் எழுந்ததால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வுகளை நடத்தி முன்னதாகவே முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

source: ns7.tv