செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

ஆந்திரப்பிரதேசத்துக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்!" -மன்மோகன் சிங் February 11, 2019

Image
ஆந்திரப்பிரதேசத்துக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கோரி டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் சந்திரபாபு நாயுடுவை, மன்மோகன் சிங் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன் சிங், சந்திரபாபு நாயுடுவின் நியாயமான கோரிக்கைகளையும், ஆந்திரப் பிரதேசத்துக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
source ns7.tv