திங்கள், 18 பிப்ரவரி, 2019

காகம், பூனையின் படங்களை பதிவிட்டு புதுச்சேரி முதல்வரின் போராட்டத்தை விமர்சித்த கிரண்பேடி! February 18, 2019


Image
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 6வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவரின் போராட்டத்தை விமர்சித்து அண்டங்காக்கா படத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
கிரண்பேடிக்கு எதிராக, ஆளுநர் மாளிகை முன் முதல்வர் நாராயணசாமி 6வது நாளாக இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது போராட்டத்தை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சர்ச்சைக்குரிய கருத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். காகத்தின் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், “CROW YOGA“ எனவும், தர்ணா கூட ஒருவகை யோகா தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

source ns7.tv