திங்கள், 25 பிப்ரவரி, 2019

வடநாட்டுக்கு ஒரு சட்டம், தமிழகத்துக்கு ஒரு சட்டமா? - அற்புதம்மாள் ஆவேசம்! February 25, 2019

Image
வடநாட்டு நடிகருக்கு ஒரு சட்டம், பேரறிவாளனுக்கு ஒரு சட்டமா என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். 
கடலூரில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மும்பை தாக்குதலில் தொடர்புடைய சஞ்சய் தத் நடிகர் என்பதால், 5 ஆண்டுகளில் அவர் விடுதலை செய்யப்பட்டதாகவும், வடநாட்டுக்கு ஒரு சட்டம், தமிழகத்துக்கு ஒரு சட்டம் என்று தான் உள்ளது, என ஆவேசமாக கூறினார். 
7 பேரை விடுதலை செய்ய கோரி, மார்ச் 9-ம் தேதி, 7 நகரங்களில் மனித சங்கிலி போராட்டம், நடத்த உள்ளதாகவும் அற்புதம்மாள் கூறினார்.

source: ns7.tv