செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

"அனில் அம்பானியின் இடைத்தரகர் போன்று பிரதமர் மோடி செயல்படுகிறார்" - ராகுல் காந்தி February 12, 2019

Image
ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சரை தொழிலதிபர் அனில் அம்பானி சந்தித்தது ஏன் என கேள்வி எழுப்பிய ராகுல், பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கரின் விளக்கம்  சந்தேகம் அளிப்பதாகவும் கூறினார்.
மேலும், அனில் அம்பானியின் இடைத்தரகர் போன்று பிரதமர் மோடி செயல்படுவதாக குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, ரஃபேல் ஒப்பந்த ரகசியங்களை பாதுகாக்க பிரதமர் மோடி தவறி விட்டார் என்றும் விமர்சித்தார்.

source ns7.tv
http://ns7.tv/ta/tamil-news/india/12/2/2019/prime-minister-modi-acting-anil-ambanis-intermediary-rahul-gandhi