ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

மார்ச் 1 முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு! February 24, 2019


Image
டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மார்ச் 1 முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார். நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஜனநாயகம், டெல்லிக்கு மட்டும் இல்லாமல் போனது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 
எனவே, மார்ச் முதல் தேதியில் இருந்து டெல்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் வரை, மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.