செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

சென்னை நில அதிர்வு: மக்கள் அச்சம் February 12, 2019

Image
வங்கக் கடலில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சென்னையிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. 

சென்னைக்கு வடகிழக்கே வங்கக் கடலில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானது. இதன் எதிரொலியாக சென்னையில் காலை 7.02 மணியளவில் வீடுகள், கட்டடங்களில் லேசான அதிர்வு ஏற்பட்டதை மக்கள் உணர்ந்தனர். சென்னையின் பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் அதிர்ந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர்.


வங்கக் கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் கடலில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்படும் என்ற எதிர்பார்த்த நிலையில் அதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் எதும் தெரிவிக்கவில்லை.
source ns7.tv