செவ்வாய், 21 மார்ச், 2017

தமிழகத்தை குறிவைத்த அமித் ஷா.? அடுத்த கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்ற திட்டம் ?

நாடு முழுவதும் காங்கிரஸ் ஆட்சியை ஒழித்துவிட்டு பாஜக ஆட்சியை மலர செய்வதற்கான வியூகத்தை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வகுத்துள்ளார்.
இது பற்றி பாஜ வட்டாரங்கள் தெரிவித்ததாவது: எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்க பல திட்டங்களை செயல்படுத்தி அதற்கு ஏற்றார் போல் அமித்ஷா செயல்படுத்தி வருகின்றார்.
இதற்கு உதாரணம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலே சாட்சி என்று கூறியுள்ளனர். அதில் கலவரம் ஏற்படுத்தி ஆட்சியை பிடித்தது போல அதேபோன்று 2019 நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் குறைந்தது 100 தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்பது அமித்ஷா திட்டம் தீட்டியுள்ளாராம்.
இதற்காக தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களில் தலைமை பொறுப்புகளில் உள்ளவர்களை மாற்ற திட்டமிட்டுள்ளாராம்.
விரைவில் இந்த 3 மாநிலங்களுக்கு நேரடியாக சென்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

Related Posts: