காஷ்மீர் சென்று இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவி செய்ய வண்டி நிறைய கற்களுடன் உ.பி-யை சேர்ந்த 1000 சாமியார்கள் தயாராக உள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் கான்பூர் நகரை மையமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு ‘ஜன் சேனா’. இதில் உறுப்பினராக உள்ள 1000-க்கும் மேற்பட்ட சாமியார்கள், எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உதவி செய்ய ஒரு குழுவாக காஷ்மீர் செல்ல திட்டமிட்டுள்ளனர். வரும் 7-ம் தேதி காஷ்மீர் கிளம்ப திட்டமிட்டுள்ள சாமியார்கள் அனைவரும் வண்டி நிறைய கற்களுடன் தயாராக உள்ளனர்.
இதுகுறித்து ஜன் சேனாவின் நிறுவனரான பால்யோகி பேசுகையில், “நாங்கள் ஒழு குழுவாக சென்று ராணுவ வீரர்களுக்கு உதவ திட்டமிட்டுள்ளோம். இதற்காக பிரதமர் மோடியிடம் அனுமதி கேட்டோம். ஆனால் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. எங்கள் மாவட்ட நிர்வாகமும் எங்களை காஷ்மீர் செல்ல அனுமதிக்க மறுக்கின்றது. எந்த தடை வந்தாலும் நாங்கள் காஷ்மீர் சென்றே தீருவோம். ஒருவேளை எங்களை அரசு தடுத்தாலும் நாங்கள் தனித்தனியாக பிரிந்து சென்று, பின்பு காஷ்மீரில் குழுவாக ஒன்றிணைந்து நம் ராணுவர் வீரர்களுக்கு உதவுவோம்” என்று தெரிவித்தார்.
மேலும் தாங்கள் செல்வதற்காக கற்கள் நிறைந்த வண்டிகளும், கார்களும் தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், காஷ்மீரில் தங்களை யாரேனும் தடுக்க முயன்றால் கற்களைக்கொண்டு அவர்களை தாக்குவோம் எனவும் ஆவேசமாக கூறினார்.
உத்தரபிரதேசத்தின் கான்பூர் நகரை மையமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு ‘ஜன் சேனா’. இதில் உறுப்பினராக உள்ள 1000-க்கும் மேற்பட்ட சாமியார்கள், எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உதவி செய்ய ஒரு குழுவாக காஷ்மீர் செல்ல திட்டமிட்டுள்ளனர். வரும் 7-ம் தேதி காஷ்மீர் கிளம்ப திட்டமிட்டுள்ள சாமியார்கள் அனைவரும் வண்டி நிறைய கற்களுடன் தயாராக உள்ளனர்.
இதுகுறித்து ஜன் சேனாவின் நிறுவனரான பால்யோகி பேசுகையில், “நாங்கள் ஒழு குழுவாக சென்று ராணுவ வீரர்களுக்கு உதவ திட்டமிட்டுள்ளோம். இதற்காக பிரதமர் மோடியிடம் அனுமதி கேட்டோம். ஆனால் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. எங்கள் மாவட்ட நிர்வாகமும் எங்களை காஷ்மீர் செல்ல அனுமதிக்க மறுக்கின்றது. எந்த தடை வந்தாலும் நாங்கள் காஷ்மீர் சென்றே தீருவோம். ஒருவேளை எங்களை அரசு தடுத்தாலும் நாங்கள் தனித்தனியாக பிரிந்து சென்று, பின்பு காஷ்மீரில் குழுவாக ஒன்றிணைந்து நம் ராணுவர் வீரர்களுக்கு உதவுவோம்” என்று தெரிவித்தார்.
மேலும் தாங்கள் செல்வதற்காக கற்கள் நிறைந்த வண்டிகளும், கார்களும் தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், காஷ்மீரில் தங்களை யாரேனும் தடுக்க முயன்றால் கற்களைக்கொண்டு அவர்களை தாக்குவோம் எனவும் ஆவேசமாக கூறினார்.