நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைகாலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
அண்மையில் இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்தியா முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதினார்கள். இதனிடையே நீட் தேர்வில் வினாத்தாள்கள் வெவ்வேறு மாதிரியாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. குறிப்பாக பெங்காலி உள்ளிட்ட மொழி வினாத்தாள் கடினமாக இருந்ததாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து ஒரே மாதிரியான வினாத்தாள்கள் கேட்கப்படவில்லை என்றும், தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதிக்கவேண்டும் என்றும் திருச்சியைச் சேர்ந்த சக்தி மலர்க்கொடி என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக ஜூன் 7க்குள் சி.பி.எஸ்.இ மற்றும் மருத்துவக் கவுன்சில் பதில் மனுத்தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.