பெங்களூரு காவல் துறை புதிய தொழில்நுட்பங்களையும், சமூக வலைதளங்களையும் பயன்படுத்தி ஆபத்திலிருப்பவர்களை மீட்கும் செயல்களில் ஈடுபடுவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது.
பெங்களூரு மாநகர காவல் துறைக்கென்று தனியா செயலிகள் உள்ளன. அந்த செயலிகள் மூலம் ஆபத்தில் இருக்கும் இடத்தை தெரிவித்தால், காவல்துறை விரைந்து செயல்பட்டு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்கும். இதற்கென ப்ரத்யேக தொலைபேசி எண்களும் மாநகர காவல்துறையால் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெங்களூரு மாநகர காவல்துறை வாட்சப் மூலம் உதவி கோரும் முறையை அறிமுகப் படுத்தியிருக்கிறது. அதன்படி தொலைபேசியில் காவல்துறைக்கோ, மற்றவர்களுக்கோ அவசரத்திற்கு போன் செய்து புகார் அளிக்க முடியாத இக்கட்டான சூழ்நிலையில் இருந்தால், காவல்துறை அளித்துள்ள புகார் அளிக்கும் எண்ணில் (9480801000) யார் எந்த இடத்தில் இருக்கிறோம் என்று வாட்சப் மெசேஜ் மூலம் தெரிவித்துவிட்டால் போதும். உடனடியாக செயலில் இறங்கி ஆபத்தில் இருப்பவரை மீட்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது .


இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது மக்களின் முதல் தேர்வாக எது இருக்க வேண்டும் என்ற பயனாளர் ஒருவரின் கேள்விக்கு, 100 என்ற எண்ணுக்கு அழைப்பதற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், அப்படி அழைப்புகள் செய்யமுடியாது எனும் பட்சத்தில் வாட்சப்பில் புகார் தெரிவிக்கலாம் என்று பெங்களூரு மாநகர கமிஷனர் ப்ரவீன் சூட் தெரிவித்துள்ளார்.
அனைவரும் இப்போது பெருமளவில் வாட்சப் பயன்பாட்டை அன்றாடத் தேவைகளில் ஒன்றாக்கிக் கொண்டுவிட்ட நிலையில், பெங்களூரு காவல்துறை அதை பாதுகாப்புப் பணிக்குப் பயன்படுத்துவதை பெங்களூர் மக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர்.
பெங்களூரு மாநகர காவல் துறைக்கென்று தனியா செயலிகள் உள்ளன. அந்த செயலிகள் மூலம் ஆபத்தில் இருக்கும் இடத்தை தெரிவித்தால், காவல்துறை விரைந்து செயல்பட்டு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்கும். இதற்கென ப்ரத்யேக தொலைபேசி எண்களும் மாநகர காவல்துறையால் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெங்களூரு மாநகர காவல்துறை வாட்சப் மூலம் உதவி கோரும் முறையை அறிமுகப் படுத்தியிருக்கிறது. அதன்படி தொலைபேசியில் காவல்துறைக்கோ, மற்றவர்களுக்கோ அவசரத்திற்கு போன் செய்து புகார் அளிக்க முடியாத இக்கட்டான சூழ்நிலையில் இருந்தால், காவல்துறை அளித்துள்ள புகார் அளிக்கும் எண்ணில் (9480801000) யார் எந்த இடத்தில் இருக்கிறோம் என்று வாட்சப் மெசேஜ் மூலம் தெரிவித்துவிட்டால் போதும். உடனடியாக செயலில் இறங்கி ஆபத்தில் இருப்பவரை மீட்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது .


இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது மக்களின் முதல் தேர்வாக எது இருக்க வேண்டும் என்ற பயனாளர் ஒருவரின் கேள்விக்கு, 100 என்ற எண்ணுக்கு அழைப்பதற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், அப்படி அழைப்புகள் செய்யமுடியாது எனும் பட்சத்தில் வாட்சப்பில் புகார் தெரிவிக்கலாம் என்று பெங்களூரு மாநகர கமிஷனர் ப்ரவீன் சூட் தெரிவித்துள்ளார்.
அனைவரும் இப்போது பெருமளவில் வாட்சப் பயன்பாட்டை அன்றாடத் தேவைகளில் ஒன்றாக்கிக் கொண்டுவிட்ட நிலையில், பெங்களூரு காவல்துறை அதை பாதுகாப்புப் பணிக்குப் பயன்படுத்துவதை பெங்களூர் மக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர்.