Home »
» அமைதியாக முடிந்தது குஜராத் சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தல்! December 10, 2017
குஜராத் சட்டப்பேரவைக்கு நடந்த முதற்கட்டத் தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவாகின.சவுராஷ்ட்ரா, தெற்கு குஜராத் பகுதிகளுக்கு உட்பட்ட 89 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 5 மணிக்கு முடிந்தது. தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாகவும், 68 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, போர்பந்தரில் உள்ள வாக்குச்சாவடிகளில் புளூடூத் மூலம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை இணைத்து, முறைகேடு நடப்பதாக குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவர் மோதவாடியா குற்றம்சாட்டினார். இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் குழுவினர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.இந்நிலையில், வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளதோடு, பாஜக மாபெரும் வெற்றி பெறும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Related Posts:
சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் வெளிநாட்டு மலர்கள்...! April 23, 2019
கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில், வைக்கப்பட்ட அரிய வகை ம… Read More
இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்வு! April 23, 2019
source ns7.tv
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் நேற்று முன்தினம் 8 இடங்களில்… Read More
மதுரை மத்திய சிறையில் கைதிகள் திடீர் கலவரம்! April 23, 2019
மதுரை மத்திய சிறையில், கைதிகள் திடீர் கலவரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளும், விசாரணை … Read More
விழுப்புரம் கள்ளக்குறிச்சியில் களைகட்டும் பனை நுங்கு விற்பனை! April 23, 2019
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில், பனை நுங்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
கோடைகாலம் தொடங்கி, வெயில் கடுமை… Read More
டிக் - டாக் செயலி மீதான தடையை நீக்கியது உயர்நீதி மன்ற மதுரைக் கிளை! April 24, 2019
.சிறுவர் சிறுமிகள் பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய கூடாது என்ற நிபந்தனையுடன் த… Read More