திங்கள், 30 மார்ச், 2020

தமிழகத்திற்கு துணை ராணுவப் படை வர உள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல - ராணுவம் விளக்கம்

கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், போலீசாரின் கண்காணிப்பையும் மீறி பலர் தேவையின்றி வெளியில் சுற்றித் திரிவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழகத்திற்கு துணை ராணுவப்படை வரவுள்ளதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

அவர்களுடன் முன்னாள் படை வீரர்கள், என்.சி.சி. படையினரும் களமிறக்கப்படுவதாக தகவல் வெளியானது. மேலும், அவசரநிலை பிறப்பிக்கப்படும் என்றும் செய்தி வெளியானது.


இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய ராணுவம், சமூகவலைதளங்களில் வெளியாகும் தகவலில் உண்மையில்லை என விளக்கம் அளித்துள்ளது.
credit : 
https://tamil.news18.com/news/tamil-nadu/no-para-military-force-security-in-tamilnadu-says-officials-vin-273361.html