ஞாயிறு, 29 மார்ச், 2020

நோயாளிகளுக்கு கரம் கொடுக்கும் இந்திய ரயில்வே.

நோயாளிகளுக்கு கரம் கொடுக்கும் இந்திய ரயில்வே... ரயில்களில் உருவானது தனி வார்டுகள்! Coronavirus Tamil News: ரயில் பெட்டிகள் மூலமாக உருவாகும் தனி வார்டுகளும், வென்டிலேட்டர்களும் பெரும் பயன் அளிப்பவையாக இருக்கும்.

நோயாளிகளுக்கு கரம் கொடுக்கும் இந்திய ரயில்வே... ரயில்களில் உருவானது தனி வார்டுகள்!

Coronavirus Tamil News: ரயில் பெட்டிகள் மூலமாக உருவாகும் தனி வார்டுகளும், வென்டிலேட்டர்களும் பெரும் பயன் அளிப்பவையாக இருக்கும்.

Indian Railway Coaches To Become Corona Isolation Wards: கொரோனா முன் எச்சரிக்கையாக தனது ஓட்டத்தை நிறுத்தியது இந்திய ரயில்வே. ஆனால் சேவை நிற்கவில்லை. இதோ இன்னொரு பரிமாணத்தில்! ரயில் பெட்டிகள், கொரோனா வார்டுகளாக உருப்பெறுகின்றன. சென்னை ஐ.சி.எஃப்-ல் வென்டிலேட்டர் தயாராக இருக்கிறது.
கொரோனா முன் எச்சரிக்கையாக நாடு முழுவதும் பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் பயணிகள் ரயில்கள் இப்படி முடக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. எனினும் இந்த நெருக்கடியான சூழலில் மக்களுக்கு தனது சேவையை இந்திய ரயில்வே நிறுத்தவில்லை.

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் ஆகியோர் வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் பேட்டி அளித்தனர். அப்போது ரயில்வே மேற்கொள்ளவிருக்கும் கொரோனா எதிர்ப்பு சேவையை பட்டியல் இட்டனர்.
அதன்படி கபுர்தலாவில் அமைந்துள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை, தனது ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சைக்கான தனி வார்டுகளாக மாற்ற இருக்கிறது. இந்த சேவைக்கு ஏ.சி. அல்லாத பெட்டிகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. ஏ.சி. பெட்டிகள் என்றால், கிருமி நாசினி போக்குவது உள்ளிட்ட பணிகள் சிரமம் என்பதால் இந்தத் தேர்வு.
ஐ.சி.யூ வார்டு மாதிரியான டிஸைன் இறுதி செய்யப்பட்டுவிட்டால், அதன்பிறகு பணிகளை தொடங்க இருக்கிறது கபுர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலை. இந்தப் பணி மிகச் சுலபமானதாகவே இருக்கும் என்கிறார்கள் அதிகாரிகள்.
சென்னை ஐ.சி.எஃப் நிறுவனத்தில், வென் டிலேட்டர்கள் தயாரிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தியாவின் முதல் மின்சார மிதவேக ரயிலை உருவாக்கிய பெருமைக்குரியது சென்னை ஐ.சி.எஃப். வென்டிலேட்டர்களை உருவாக்குவது சுலபம் என்றாலும், அதை பயன்பாடு அளவுக்கு மேம்படுத்துவதில் சவால்கள் இருக்கின்றன. அந்த சவாலை ஐசிஎஃப் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
கொரோனாவின் அடுத்த நகர்வுகள் எப்படி இருக்கும் என உறுதியாக கணிக்க முடியவில்லை. எனினும் இந்தியாவின் ஊரக, கிராமப் பகுதிகளில் பாதிப்பு இருந்தால் ரயில் பெட்டிகள் மூலமாக உருவாகும் தனி வார்டுகளும், வென்டிலேட்டர்களும் பெரும் பயன் அளிப்பவையாக இருக்கும்.
credit indianexpress.com

Related Posts:

  • 2 பெண்களை காணவில்லை நாகப்பட்டினம்,தோப்பு துறையை சேர்ந்த 20பேர் துணி எடுக்க திருச்சி கடை வீதிக்கு வந்த போது, இரண்டு பெண்களை மட்டும் காணவில்லை. பெனாஜிர்(22) துர்ஸா.(21). இ… Read More
  • பிடியாணை பிடியாணை இன்றி கைது செய்ய கூடிய குற்றங்கள், பிடியாணைவுடன் கைது செய்ய கூடிய குற்றங்கள் என்னென்ன என்பதை இந்திய தண்டனை சட்டத்தில் தெரிந்துகொள்வது இவ்வாற… Read More
  • கட்டிடங்கள் சட்டம் தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/2 ன்படி குடியிருப்பவர் வாடகை கொடுக்காமல் இருப்பது, உள் வாடகை அல்லது மேல் வாடகைக்கு விடுவது, வீட்டு உர… Read More
  • லோக் ஆயுக்தா லோக் ஆயுக்தா தற்போது நடைமுறையில் உள்ள மாநிலங்களாக மகாராஷ்டிரா(1971), பீகார்(1973), ராஜஸ்தான்(1973), உத்திரபிரதேசம்(1975), மத்திய பிரதேசம்(1981), ஆந்த… Read More
  • “மோடியால் நாம் பிச்சைதான் எடுக்கப் போகிறோம்!” : இயக்குநர் வசந்தபாலன் அதிரடி பேச்சு “இந்தியாவின் வளங்களை அந்நிய நாடுகளுக்கு அள்ளிக்கொடுக்கிறார் பிரதமர் மோடி. இதன் காரணமாக இன்னும் இருபதாண்டுகளில் இந்தியா உணவுக்குக் கையேந்த… Read More