திங்கள், 23 மார்ச், 2020

"11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்" - தமிழக அரசு March 23, 2020

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில், கொரோனா பாதிப்பு தீவிரமடைவதால் 11 மற்றும் 12-ம் வகுப்பிற்கு மீதமுள்ள தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா என பெற்றோர்கள், ஆசிரியர்கள் இடையே சந்தேகம் நிலவியது. 
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அளித்துள்ள விளக்கத்தில், 3 தேர்வுகள் மட்டுமே மீதம் இருப்பதால், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளை தள்ளிவைக்கும் எண்ணம் இல்லை என்று கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வரும் 24ஆம் தேதியுடன் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வும், வரும் 26ஆம் தேதியுடன் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் நிறைவடைய உள்ளன.
credit ns7.tv