புதன், 18 மார்ச், 2020

தமிழக எம்.பிக்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த ராகுல் காந்தி..! March 17, 2020

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.,க்களுக்கு, துணை கேள்வி எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதால், கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். 
பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக எம்.பி.,க்களை மக்களவை சபாநாயகர் அவமானப்படுத்தி விட்டதாகவும், தமிழ் மொழி தொடர்பாக அவர்கள் துணை கேள்வி எழுப்ப முயன்றபோது, அதற்கு அனுமதி வழங்கப்படாதது, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அவமானப்படுத்தும் செயல் என்றும், ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மேலும், இது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள உரிமையை மறுக்கும் நடவடிக்கையாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 
தமிழ் வரலாற்றுச் சிறப்புமிக்க மொழி என்றும் தமிழக எம்.பி.,க்களின் உணர்வில் கலந்துள்ள மொழி என்றும் கூறினார். ஆனால் தமிழக எம்.பிக்களை பேச அனுமதிக்காதது தமிழ் மொழி மீதான தாக்குதல் என்றும், அவர்களின் உரிமைகள் மீதான தாக்குதல் என்றும் விமர்சித்த ராகுல் காந்தி, இது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்றும் தெரிவித்தார். மேலும் நாடாளுமன்றத்தில் யாரும் கேள்வி கேட்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும், தற்போது நிலையில் விவாதங்களும் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
TR Balu
இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறுகையில், தமிழ் மொழி ஆட்சி விவகாரம் தொடர்பாக முன்னதாகவே நோட்டீஸ் அளித்தும் துணை கேள்வி கேட்க, சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை என்றும், எனவே அவரது முடிவை எதிர்த்து வெளிநடப்பு செய்ததாகவும் அதற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியும் வெளிநடப்பு செய்தது என்றார்.
credit ns7.tv, ANI

Related Posts:

  • பட்டா மாற்றம் செய்வதில் ... ..மூன்று இனைப்புகள் பயன்படுத்தப்படுகிறது........இனைப்பு 1.. ..பட்டா மாற்ற ...ஆவணங்களை ..கி.நி.அ ரிடம் கொடுக்கும் போது,அவர் தரும் ஒப்புகை ரசீது தான… Read More
  • காணவில்லை. அவசியம் பகிருங்கள்.... காணவில்லை..!!! காணவில்லை..!! நேற்று மாலை முதல் இந்த படத்தில் இருக்கும் இந்த சிறுவன் காணவில்லை. பெயர் சுலைமான்வேலூர் மா… Read More
  • ‘வாய் துர்நாற்றமா..?’ பயம் வேண்டாம்! தினமும் காலையில் பல் துலக்குவதற்கு முன் நல்லெண்ணெய்யால் வாயை நன்றாகக் கொப்பளியுங்கள், உங்கள் வாயிலிருந்து வரும் துர்நாற்றம் சுத்தமாக இல்லாமல்… Read More
  • கெய்ல் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி. திமுக + காங் .அரசின் அடுத்த துரோகம் அம்பலம் . . . :.--கடந்த மைனாரிட்டி திமுக அரசில்GAIL கெய்ல் நிறுவனம்விளைநிலங்கள் வழியாக குழாய் பதித்து கேஸ் கொண… Read More
  • குர்ஆன் அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்… Read More