வியாழன், 19 மார்ச், 2020

கொரோனா எதிரொலியாக 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணர்வகள் தேர்வின்றி தேர்ச்சி!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்ட தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரானோவால் இதுவரை 161 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
 கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஊழியர்களும் வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
Photo
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளையும் ஒத்திவைக்க பல்கலைக்கழக மானியக்குழு (UGC) உத்தரவிட்டுள்ளது. இது குறித்து UGC வெளியிட்டுள்ள அறிவிப்பில் அனைத்து செமஸ்டர் தேர்வுகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளும் வரும் மார்ச் 31ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Photo
இதே போல் தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. மேலும் வரும் 27ம் தேதி தொடங்கவிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் தற்போது நடைபெற்று வரும் 11 & 12ம் வகுப்பு தேர்வுகளையும் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான புதிய தேர்வு அட்டவணையை தயார் செய்யும் பணியில் பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 
கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
credit ns7.tv