வெள்ளி, 20 மார்ச், 2020

தமிழ்நாடு முஸ்லிம் ஜமாத் அறிக்கை!

Image
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இன்று மதியம் MASJIDல் 15 நிமிடங்கள் மட்டுமே தொழுகை நடத்தப்படும் என தமிழ்நாடு முஸ்லிம் ஜமாத் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் MASJIDல்  சிறப்பு தொழுகைகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெறுவது வழக்கம். எனினும், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று 15 நிமிடங்களுக்கு மட்டுமே தொழுகை நடத்தப்படும் என்றும், தொழுகைக்கு வருபவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முதியவர்கள் வீட்டிலிருந்தே தொழுகை செய்து கொள்ளலாம் என்றும் இருமல், சளி தொந்தரவு இருப்பவர்கள் பொது நன்மை கருதி முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
credit ; Ns7t.v