திங்கள், 30 மார்ச், 2020

பிரதமர் கூறியதை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு தோல்விதான் - அரவிந்த் கெஜ்ரிவால்

நேற்று டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூடியிருந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அவர் பேசியபோது..
➤ ஊரடங்கை பிரதமர் அறிவித்தபோது எங்கு உள்ளீர்களோ அங்கேயே இருங்கள் என்று கூறினார்
➤ இதுவே ஊரடங்கிற்கான மந்திரம் என கருதுகிறேன்
➤ இதனை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு வெற்றிபெறாது, கொரோனாவிற்கு எதிரான நாட்டின் போராட்டம் தோல்வியை தழுவும்
➤ பல்வேறு நகரங்களில் வேலைபார்த்து வரும் பெரியளவிலான எண்ணிக்கையிலானவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர், அவர்கள் இருக்கும் இடத்திலேயே தங்கியிருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்
➤ நேற்று ஆயிரக்கணக்கானவர்கள் கூட்டமாக சேர்ந்திருப்பதை பார்த்தேன், இவர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் நீங்களும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும். உங்களுடைய சொந்த வாழ்க்கையையும், குடும்பத்தையும் பற்றி சிந்தித்து பாருங்கள்
➤ ஒவ்வொரு நாளும் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு டெல்லி அரசு உணவு வழங்கி வருகிறது
➤ கூடுமானவரை அனைவருக்கும் உணவு கிடைக்க தேவையான நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டுள்ளது
➤ டெல்லியில் உணவு, தண்ணீர் பற்றாக்குறை என்று பேச்சுக்கே இடமில்லை
➤ வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் வாடகை கேட்டு தொந்தரவு அளிக்க வேண்டாம் என வீட்டு உரிமையாளர்களிடம் கோருகிறேன், யாராவது வாடகை தர இயலாத சூழல் ஏற்பட்டால், அந்த வாடகையை அரசே செலுத்தும்
➤ நீங்கள் இதுவரை பணம் சேர்த்திருந்தால், அதனை பயன்படுத்த சரியான தருணம் இது!
➤ ஊரடங்கில் மீதம் உள்ள 18 நாட்களில் பகவத் கீதையின் 18 அத்தியாயங்களை படியுங்கள், அதை தான் குடும்ப வாழ்க்கையில் நாம் சந்திக்கிறோம்

டெல்லியில் கொரோனாவால் இதுவரை 49 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு பேர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
credti ns7tv