வெள்ளி, 7 ஜூலை, 2023

சந்திரயான் 3 விண்கலம் வரும் 14-ம் தேதி விண்ணில் பாயும்! இஸ்ரோ அறிவிப்பு!

 6 7 23

சந்திரயான் – 3 விண்கலம் வரும் 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்ய 2008-ல் சந்திரயான்-1 விண்கலத்தை அனுப்பியது. அந்த சோதனை நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது. இதையடுத்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் விதமாக சந்திரயான்-2 விண்கலம் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டது.

இந்த சந்திரயான்-2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 2019 ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டு, 2019 செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப்பாதையை சென்றடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது.

அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய சந்திரயான் – 3 விண்கலம், 615 கோடி ரூபாய் செலவில் தயாராகி உள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் இந்த சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்பட உள்ளது. சந்திரயான் – 3 விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிஹோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, வரும் 14-ம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


source https://news7tamil.live/chandrayaan-3-will-launch-on-14th-isro-announcement.html

Related Posts:

  • Missing திருச்சி அரியமங்கலம் சிவகாமி அம்மையார் தெருவைச் சேர்ந்தவர் காதர் மைதீன். இவரது மகன் கமர் (எ) ஷாஹின்ஷா . இவர் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் 10 ம்… Read More
  • "சொந்த வரலாற்றை மறந்த சமுதாயம் வரலாறை படைக்க இயலாது' "சொந்த வரலாற்றை மறந்த சமுதாயம் வரலாறை படைக்க இயலாது' இது அமெரிக்க கறுப்பு நிறத்தவர்களுக்கு மட்டுமல்ல ஆக்கிரமிப்பிற்கும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட… Read More
  • Hadis சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது: நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமைய… Read More
  • காவலர்கள் கடுமையாக தாக்கி கடத்தி சென்றுள்ளனர் .. சுலைமான் சேட் மற்றும் சட்ட கல்லூரி மாணவன் நதீம் ஆகியோர் மதுரை காவல் நிலையத்தில் நிபந்தனை கையெழுத்து போட சென்ற போது ஐந்துக்கும் மேற்பட்ட காவலர்கள் … Read More
  • Missing ‪#‎உறுதி_செய்யப்பட்ட_தகவலுக்கு__உங்களின்__உதவி__தேவை‬…!!! ‪#‎நண்பர்களே‬ இப் புகைப்படத்தில் உள்ள பெண் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சஜினா ; தனது கண… Read More